முருங்கைக்காய் ஒரு கிலோ 2000 ரூபா –  யாழ்ப்பாணச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Monday, April 14th, 2025

புதுவருடத்தில் யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதிகளில் உள்ள  சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது. 

முருங்கைக்காய் ஒரு கிலோ 2000 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 450 ரூபாவிற்கும், தக்காளி பழம் ஒரு கிலோ 600 ரூபாவிற்கும்,  பீற்றூட் ஒரு கிலோ 300 ரூபாவிற்கும் அதிக விலைகளில் வடமராட்சி சந்தைகளில் விற்கப்பட்டமை அவதானிக்க முடிந்தது.

நேற்றைய தினம் புத்தாண்டு சந்தை  பருத்தித்துறை,  நெல்லியடி, மந்திகை  நகர்ப் பகுதியில் கடந்த வருடங்கள் போல் அல்லாது மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதற்கு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

000

Related posts:

கோண்டாவில் அமரகவி மாதர் சங்கதிதிற்கு சுயதொழில் உதவிக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நிதியுதவி வழங்க...
வடக்கிலுள்ள பாடசாலை மாணவர் தலைமயிர் வெட்ட, சீவ விதிமுறைகள் - ஆசிரியர்களையும் பின்பற்றக் கோரிக்கை!
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் - சுரேஷ் சாலேவுக்கும் சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதற்க...