முன்று மில்லியன் நிதி ஒதுக்கீடு – இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
Wednesday, April 16th, 2025
நாச்சிக்குடா இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு விஜயம் செய்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த இறங்குதுறையின் நிலைமைகளை அவதானித்துள்ளார்.
குறித்த இறங்குதுறைப் பகுதியில் வான்தோண்டும் பணிகள் பூர்த்தியான நிலையில் பிரதேச கடற்றொழிலாளர்களின் அழைப்பின் பெயரில் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார் .
மேற்படி பகுதியை வான்தோண்டி தருமாறு கடற்றொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பிரதேச கடற்றொழிலாளர்களினால் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக சுமார் முன்று மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக இவ் வேலைத்திட்டம் மேற்கொள்ளப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
00
Related posts:
டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றியை உறுதிசெய்வோம் - யாழ் மாவட்ட கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர்கள்!
வடமாகாண அமைச்சர்களது மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருப்பது ஏன்? நாடாளுமன்றி...
பலநாள் மீன்பிடி கலன்களின் உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு: அமைச்சர் டக்ளஸ் இணக்கம்!
|
|
|


