மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Monday, January 9th, 2023


இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்ற மீன்பிடித் துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற புனரமைப்பு பணிகள் மற்றும் செயற்பாடுகள் போன்றவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

அண்மையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு மீன்பிடித் துறைமுகங்களுக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அவதானிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் புனரமைப்பு பணிகளுக்கான ஆலோசனைகள் கடற்றொழில் அமைச்சரினால் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இடம்பெற்ற, இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். – 09.01.2022

Related posts: