மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு!
Saturday, March 8th, 2025
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் .
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரை 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 10 அரசியல் கட்சிகளும் 38 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் 56 பேர் உயிரிழப்பு!
திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை உரிய முறையில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி!
அவுஸ்ரேலிய மாஸ்டர்ஸை தோற்கடித்த இலங்கை மாஸ்டர்ஸ்!
|
|
|


