ஈ.பி.டி.பியின் உறுப்பினர் றெமீடியஸ் மரணம் – யாழ் மாநகர சபை கொடி அரைகம்பத்தில்!
Tuesday, February 14th, 2023
வீதி விபத்தில் உயிரிழந்த ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினரும் பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமிடியசிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாண மாநகர சபையில் மாநகர சபை கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் சபையின் இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை அமுலுக்கு கொண்டுவருவதற்கான அமர்வு நடைபெற்றது.
இந்நிலையில் மாநகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களால் இரண்டு நிமிட அக வணக்கமும் செலுத்தப்பட்டது,
இதனிடையே சபை அமர்விலும் உயிரிழந்த ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினரும் பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமிடியசிற்கு இரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இளம் வர்த்தகர் கொலை: 7 பேர் கைது?
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை!
புத்தகங்களை வாசிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் - கல்வி அமைச்சர்!
|
|