மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – முக்கிய சந்தேகநபர்கள் தொடர்பில் அவசர உதவி கோரியுள்ள பொலிஸார்!
Sunday, January 19th, 2025
கடந்த ஜனவரி 16 ஆம் திகதி மன்னாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர்களை அடையாளம் காண புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில் குறித்த சந்தேகநபர்களின் வரைபடங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடன் அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.
தகவல்களை அறிய தர, மன்னார் பொலிஸ் தலைமையக அதிகாரியின் 0718591363 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது மன்னார் பொலிஸ் நிலையத்தின் 0232223224 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
வரும் 4 ஆம் திகதி கொழும்பில் சர்வதேச பொலிஸ் மாநாடு!
நாடாளுமன்றில் இடைக்கால கணக்கு அறிக்கை நிறைவேற்றம்!
நாடு இயல்பு நிலைக்கு திரும்பியபோதும் பணிகளுக்கு செல்வோர் போக்குவரத்து வசதிகள் இன்றி பெரும் அவஷ்தை!
|
|
|


