மக்கள் வெற்றிகொள்ள ஈ.பி.டி.பியின் வெற்றியை உறுதி செய்யுங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Friday, March 28th, 2025
……
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் தமது அடிப்படை தேவைகளையும் அபிலாசைகளை பெற்றுத்தரக் கூடியவர்களுக்கு வாக்குகளை வழங்கி தமக்கானவர்களை வெற்றிபெறச் செய்து தாமும் வெற்றிகொள்ள வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்புத்துறை மணியம்தோட்ட பகுதி வட்டாரம் 12 இல் இன்றையதினம் வேட்பாளர் குகன் அவர்களின் ஏற்பாட்டில் நடைற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கருத்துக் கூறும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கடந்த காலங்களில் மக்களுக்காக பெற்றுக்கொடுத்த சேவைகளையும் அனுபவங்களையும் அதிகளவாக இப்பிரதேச மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது
அந்தவகையில் மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு, மக்கள் நலன்களுக்காக சேவையாற்றிய எமது கட்சியின் வேட்பாளர்களை இம்முறையும் வெற்றிபெறச் செய்து மக்கள் தமது வாழ்வியலை வழப்படுத்திக்கொள்வார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
000
Related posts:
|
|
|


