புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனை 50 வீதத்தால் பாரிய வீழ்ச்சி – அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கவலை!.
Friday, January 3rd, 2025
கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனையானது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்ணான்டோ தெரிவித்தார்.
முன்னைய ஆண்டுகளில் நத்தார் மற்றும் புத்தாண்டு நாட்களில் பட்டாசு உற்பத்தி அதிகளவில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் பட்டாசு விற்பனை சரிந்ததால், உற்பத்திச் செலவை ஈடுகட்ட, பட்டாசுக்களை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய, உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த தேர்தல் காலத்தில் இருந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தினேஷ் பெர்னாண்டோ வெளிப்படுத்தினார்
00
Related posts:
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு: சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்!
வருட நடுப்பகுதிக்குள் உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்படும் - அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு...
நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல – ஆனால் பெரமுனவின் ஆதரவினை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரா...
|
|
|


