பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த டொனால்ட் ட்ரம்ப் தீர்மானம்!
Sunday, May 18th, 2025
காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக லிபியாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், பாலஸ்தீனியர்களை லிபியா ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
000
Related posts:
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
உக்ரேன் ஜனாதிபதி சர்வாதிகாரி - கடுமையாகச் சாடிய ட்ரம்ப்!
ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரித்த இலங்கை!
|
|
|


