நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
Saturday, December 25th, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நுவரெலியாமாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனி உருவாகக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களுக்கு இரவிலும் அதிகாலை வேளையிலும் சற்றுக் குளிரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாண பல்கலையில் மோதல் - 6 பேர் கைது!
களுத்துறை படகு விபத்து: 29 பேரது சடலங்கள் இதுவரை மீட்பு!
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று - உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது – சு...
|
|
|


