குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்யவதற்கு அமைச்சரவை அனுமதி!
Saturday, December 3rd, 2022
ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விமானங்களின் காலம் நிறைவடைகின்றமையினால் அமைச்சரவை அனுமதியுடன் புதிதாக குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அடுத்த மூன்று மாதங்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பான சேவையை வழங்கவுள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு இன்று!
'சிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய செயற்திட்டம் ஆரம்பம்!
பாடசாலைகளை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை - கல்வி அமைச்சு!
|
|
|


