சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து – புங்குடுதீவு இளைஞன் பலி!
Wednesday, May 6th, 2026
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றின் சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதித் தள்ளியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்றது.
இந்த அனர்த்தத்தின் போது 10 ஆம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த 21வயதுடைய சிறிரமனன் நிதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Related posts:
மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி முடிவு - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22 ஆயிரத்து 419 பேருக்கு டெங்கு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் ...
சீன அதிபரின் கருத்துக்கு முகத்திற்கு நேராக மறுத்த ட்ரம்ப்!
|
|
|


