பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவு!

Thursday, November 21st, 2024


அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளினதும் கற்றல் நடவடிக்கையின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (22) முடிவடைகிறது.

இதேநேரம் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகி ஜனவரி 2 ஆம் திகதி வியாழன் அன்று பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts: