நைஜீரியாவில்பேருந்துவிபத்து – 22 விளையாட்டுவீரர்கள்பலி!
Monday, June 2nd, 2025
நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் பலியாகினர்.
விளையாட்டு விழாவிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 22 விளையாட்டு வீரர்களே இவ்வாறு உயிரிழந்ததோடு பல பயணிகள் காயமடைந்துள்ளனர்.
பேருந்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், 30இற்கும் மேற்பட்ட பயணிகளுடன், இந்த வாகனம், பாலத்தில் இருந்து கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் இருந்து தப்பியவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
ஆபிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில், வீதி விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. மோசமான வீதி நிலைமைகள் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை முறையாக நடைமுறைபடுத்தாமையே இதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய தாக்குதலின் 24 ஆவது நினைவுதினம் இன்று!
பாலாலி – சென்னை இடையே இதுவரை 229 விமான சேவைகள் – 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வருகை - இலங்கை சுற...
வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை - யாழ் மாநகரின் முதல்வர்!
|
|
|


