குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் சீனாவில் கொரோனா!
Friday, March 27th, 2020கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் கடந்த சில தினங்களாக அங்கு நல்ல நிலைமை திரும்பியது.
புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு குறைந்தது.
எனினும் சீனாவில் இருந்து தற்போது கிடைக்கும் செய்திகள் அந்த அளவுக்கு நல்ல செய்திகள் அல்ல. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த சுமார் 14 வீதமானவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றியுள்ளது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோன வைரஸ் தொற்றிய நிலையில் குணமடைந்த நோயாளிகளில் 3 வீதத்தில் இருந்து 14 வீதமானோருக்கு மீண்டும் அந்த வைரஸ் தொற்றியுள்ளது.
இந்த பரிசோதனை முடிவுகள் வெளியானதை அடுத்து சீனாவில் கொரோனா வைரஸின் இரண்டும் சுற்று தாக்குதல் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது.
Related posts:
33 வருடங்களின் பின்னர் ஹொங்கொங்கை தாக்கிய பலம் வாய்ந்த சூறாவளி!
மாயமான இந்திய விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு!
போராட்டக் குழுவின் முன்னணி தளபதி உயிரிழப்பு!
|
|