நெடுந்தீவுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!

Wednesday, April 22nd, 2026

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் 2026.04.24 வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரைக்கும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெடுந்தீவு தனியார் படகு உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம், மற்றும் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கம் என்பன போராட்ட தினத்தில் தங்கள் சேவையினை நிறுத்தவுள்ளதாக போராட்ட ஏற்பாட்டுக் குழுவினருக்கு அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை (24/04) நெடுந்தீவுக்கான தனியார் கடற்போக்குவரத்து மற்றும் உள்ளூர்  தனியார் போக்குவரது சேவைகள் இடம்பெறாது என போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Related posts:


யாழ் மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவை – மாவட்ட கொரோனா ஒழிப்பு...
வெளிநாடுகள் 124 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு – நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள...
நாளை நண்பகலுக்கு முன் விண்ணப்பங்களை கையளிக்கவும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்ட...