நாடாளுமன்று  மாற்றியமைத்தால் விரைவில் மாகாணசபை தேர்தல் – யாழ் வந்த தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, September 15th, 2025


……
மாகாணசபை
தேர்தல் நடைபெறாது காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது
விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த
மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணம்.

இந்த சட்ட வரைமுறையால் எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது.

இது தீர்க்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடைபெறும். அதற்கு திணைக்களம் தயாராக இருக்கின்றது.

அல்லது குறித்த தீமானத்தை தற்போது நாடாளுமன்றில்  தனிநபர் பிரேரணையூடாக நிறைவேற்றி மீண்டும் பளைய முறைமையை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் பளைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும். அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்றையதினம் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts: