தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
Saturday, May 3rd, 2025
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்துக்கு பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக எந்தவொரு வேட்பாளரும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று இடம்பெறும் இறுதி தேர்தல் பிரசார கூட்டங்களின் காணொளி மற்றும் மேலதிக விபரங்களை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பிரதான ஒரு செய்தியில் மாத்திரம் பிரசுரிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
வானிலை தொடர்பில் பொது மக்களுக்கான முன்னறிவிப்பு!
எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அ...
ராஜபக்ஷர்களின் நிதியை மீளப் பெற்றுக்கொடுங்கள் - ஜனாதிபதியிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை!
|
|
|


