தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
Saturday, May 3rd, 2025
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்துக்கு பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக எந்தவொரு வேட்பாளரும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று இடம்பெறும் இறுதி தேர்தல் பிரசார கூட்டங்களின் காணொளி மற்றும் மேலதிக விபரங்களை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பிரதான ஒரு செய்தியில் மாத்திரம் பிரசுரிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
வட்டக்கச்சி மாயவனூர் மத்தி கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங...
மக்கள் நலன்சார் செயற்பாடுகள் எதுவுமில்லை - பருத்தித்துறை வர்த்தகர்கள் முறையீடு!
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியானது!
|
|
|


