செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை நெகிழ்வுடன் நினைவுபடுத்திய நாவற்குழி 300 வீட்டுத் திட்ட மக்கள்!

Thursday, April 24th, 2025

நாவற்குழி 300 வீட்டுத் திட்ட மக்கள், செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை நெகிழ்வுடன் நினைவுபடுத்தினர்.

குறிப்பாக, வீட்டுத் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தங்களுக்கான வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டமையை நினைவுபடுத்தியதுடன், தங்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது என்றும் தெரிவித்தனர்.

சாவகச்சேரி பிரதேச சபைக்கான 17 ஆம் வட்டார வேட்பாளர் தோழர் சுதர்ஷனின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தின்போதே மேற்குறிப்பிடப்பட்டவாறு பிரதேச மக்களினால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், 300 வீட்டுத் திட்ட மக்களின் உணர்வு வெளிப்பாடுகள் மனத்திருப்தி அளிப்பதாகவும்,  மீண்டும் எழுச்சி பெற்று கடந்த காலங்களை போன்று எதிர்காலத்திலும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் என்று உறுதியுடன் தெரிவித்தார்.

000

Related posts:

கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு வேண்டும் - இந்தியத் தூதுவரிடம் கடற்றொழில் அமைச்சர் கோரிக்...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அட்டூழியங்களுக்கு அமைச்சரவை பத்திரம் – போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாள...
இணைய நிதி மோசடி - மாதத்தின் கடந்த சில நாட்களில்   230 க்கும் அதிகமான முறைப்பாடுகள் - இலங்கை கணினி அவ...

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது இனத்துவம் அல்ல சமத்துவம் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
தேசிய நல்லிணக்கத்தினூடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீ...
கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை - 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமைச்ச...