சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை!  

Tuesday, February 11th, 2025

சீன தேசிய இன விவகார ஆணையத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான விடயங்களில் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் பான் யூ (Pan Yue), இலங்கை சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் (Xi Jinping’) அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான பான், சீனாவின் சிறுபான்மை விவகாரங்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தில், சீன அமைச்சர் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்

இவை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ள இரண்டு முக்கிய இலாகாக்கள் ஆகும்.

அமைச்சர் பான் தனது பயணத்தின் போது கண்டிக்கும் செல்ல உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது

Related posts: