மத்திய வங்கிக்கு புதிய நாணய நிதி சபை!

Sunday, July 10th, 2016

இலங்கை மத்திய வங்கியின் பொறுப்புகளையும் பணிகளையும் இலகுவாக்கும் நோக்கில் நாணய நிதி சபை ஒன்றை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியமிக்கப்பட உள்ள நாணய நிதி சபைக்கு இலங்கை மத்திய வங்கி தற்போது மேற்கொண்டு வரும் வங்கி கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகிய பொறுப்புகளை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இது குறித்து மேலும் கலந்துரையாடி நாணய நிதி சபையை ஸ்தாபிப்பது குறித்து இறுதி முடிவை எடுக்க உள்ளனர்.

Related posts: