கோழி இறைச்சியின் விலை சடுதியாக உயர்வு – நுகர்வோர் குற்றச்சாட்டு!

Monday, March 16th, 2026


………
உள்ளூர் சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். 

கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர், எம்.ஐ.எம். இக்பால் இது தொடர்பில் கூறுகையில், 

சந்தையில் நேற்று (15) கோழி இறைச்சி ஒரு கிலோ 1,400 ரூபாவாகஉயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் ஏற்பட்ட சமீபத்திய ஏற்ற, இறக்கங்களைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இது சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதிக்கிறது என தெரிவித்தார். 

இதேவேளை இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வர்த்தக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிப்பதை தவிர்க்க முடியாத நிலை காணப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்த  அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்
000

Related posts:

விமான நிலையங்களை மீள திறப்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை - அமைச்சரவைப் பேச்சாளர் க...
பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி - உர செயலாளர் காரியாலயத்...
அஸ்வெசும திட்டத்தின் முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - சமூக நலன்பு...