கொழும்புத்துறை கிழக்கு ஶ்ரீ மகா முத்தமாரி அம்மன் தேவஸ்தான இறுதி நாள் அலங்காரத் திருவிழாவில் கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 19th, 2026

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை கிழக்கு ஶ்ரீ மகா முத்தமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்காரத் திருவிழாவில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா. சிறப்பு பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

முன்பதாக கடந்த 15.04.2026 திகதியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொழும்புத்துறை கிழக்கு ஶ்ரீ மகா முத்தமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார திருவிழாவின் இறுதி நாள் உற்சவம் இன்றாகும்,

இந்நிலையில் பூசை வழிபாடுகளில் கலந்தகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆரோக்கிய நலனக்காக ஆலயத்தின் பிரதம குருக்கள் சிறப்பு பூசை வழிபாடுகளை மேற்கொண்டு காளாஞ்சி கொடுத்து ஆசீர்வதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அலங்கார திருவிழாவின் இறுதி நாள் பூசை நிகழ்வுகளின் பின்னர் நடைபெற்ற அன்னதானத்திலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Related posts: