கட்சியின் கடந்த கால அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் இளைய தலைமுறையினருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Monday, March 17th, 2025
மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கான உத்வேகத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இருக்கின்றது என்ற செய்தியை நெடுந்தீவு மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்ட செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் கடந்த கால அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் இளைய தலைமுறையினர் மத்தியில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நெடுந்தீவு பிரதேச சபைக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுடனான சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
இதேநேரம் 1991 ஆம் ஆண்டு அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் உண்ண உணவின்றி பசியுடன் இருந்த மக்களின் அழைப்பை ஏற்று, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நெடுந்தீவில் கால் பதித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அந்தப் பிரதேசத்தினை மீளகட்டியழுப்பியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை...
ஆட்சேர்ப்பு செயன்முறையில் மாற்றம் மேற்கொள்ளும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்யாழ்ப்பாணத்தில் விக்சித் பாரத் ஓட்டம்!
|
|
|


