கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்பிடியாளர் ஒருவர் நெடுந்தீவு மீனவரால் மீட்பு!
Saturday, May 23rd, 2026
……….
தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்டியாளர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் இராமேஸ்வரம் இராமனாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதே நேரம் இன்று (23) மாலை 4.30 மணியளவில் குறித்த மீன்பிடியாளர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்கப்பட்ட நிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நாளை (24) குறித்த தமிழக மீன்பிடியாளரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் நெடுந்தீவு பொலிசார்
தெரிவித்தனர்.
Related posts:
உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க முல்லைத்தீவில் விஷேட சந்தை!
இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது - மேலும் ஒரு லட்சம் பைசர் தடுப்பூச...
ஒமிக்ரோன் கொரோனா நாட்டில் நுழைவதைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் நாம...
|
|
|


