27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Monday, July 25th, 2022அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு கடந்த 2 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.
இந்த திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதிய நியமனங்கள் மற்றும் அந்த நியமனங்களில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் பிரதமருடன் ஜனாதிபதி கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, பிரதமர் மீது நாடாளுமன்றம் நம்பிக்கை இழந்தால், பிரதமரை இந்த திருத்தத்தின் ஊடாக நீக்குவதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
ஊவா, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் சாத்தியம்!
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை - மதுரை உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
|
|
2 ஆயிரத்து 500 கறவை பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் தெரிவிப்பு!
ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகுவே காரணம் - பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என இஸ்ரேல் மக்கள் போரா...
பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ச...