ஊர்காவற்றுறையில் மண் கவ்விய சைக்கிள்!

Monday, November 24th, 2025


……
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு சபை உறுப்பினர்களின் 6 இல் 5 பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பிரதேசபையின் மாதாந்த அமர்வு இன்று இன்று (24)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசளர் அன்னராச தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மக்களுக்கான காட்சிப்படுத்தலின் பின்னர் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு விவாதத்துக்கு கொண்டுவரப்பட்டது.

உறுப்பினர்களின்
பல்வேறு விமர்சனங்கள் விவாதத்தின் பின் குறித்த பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு  விடப்பட்டது.

பாதீட்டை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது சைக்கி ள் கசியின் உறுப்பினர் ஒருவருடன் எதிராக 10 வாக்குகளும் ஆதரவாக 3 வாக்கிகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடு மேலதிக 7 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த பிரதேச சபையின் 13 மொத்த உறுப்பினர்களில் 4 ஆசனங்களை ஈ.பி.டி.பியும் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும்
தேசிய மக்கள் கட்சி 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும், விளக்கு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் கட்சி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இன்னிலையில் முன்னிலை பெற்றிருந்த ஈ.பி.டி.பி ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுக்களில் ஆதவு வழங்க சம்பதித்திருந்தது.

இதன் அடிப்படையில் 2 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சி ஈ.பி.டி.பியி. 4 உறுப்பினர்களது ஆதரவுடன் ஆட்சியமைக்க தனது முன்மொழிவை சபையில் பிரஸ்த்தாபித்திருந்தது.

ஆனால் 3 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி அதிகார மோகத்தில் தேசிய மக்கள் சக்தியுடனான நடு நிலமை இணக்கப்பாடுடன்  சங்கு சின்னத்தில் போட்டியிட்ட  கட்சியின் ஓர் ஆசனம்,  தமிழரசுக் கட்சியின் ஓர் ஆசனத்தை தேசியம் பேசி சூட்சகமாக வலையில் வீழ்த்தி சபையின் ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்தியிருந்தது.

சைக்கிள் கட்சியின் தூர நோக்கற்ற இந்த ஆட்சி அதிகார மோகத்தால் சபையின் செயற்பாடுகள் ஆட்சி அமைந்த சில நாள்களிலேயே ஆட்டம் காண தொடங்கியது.

அதன் வெளிப்பாடாக இன்று நடந்த பாதீட்டின் பெறுபேறுகள் அமைந்துள்ளாது.

இன்றைய வாக்கெடுப்பில் எதிராக ஈ.பி.டி.பி 4, என்.பி.பி 3, வீடு 1, சைக்கிள் 1, சங்கு 1 ஆகிய உறுப்பினர்களது வாக்குகள் பதியப்பட்டன.

ஆதரவாக சைக்கிள் கட்சியின் தவிசாளர் மற்றும் ஒரு உறுப்பினருடன் 
உப தவிசளர் பதவிக்காக தமிழரசில் இருந்து நழுவிச் சென்றவரது வாக்குடன் 3 வாக்குகள்  கிடைத்தன.

இதன்படி 2026 க்கான பாதீடு மேலதிக 7 வாக்குகளால் தொற்கடிக்கப்படுள்ளது.

உள்ளூரதிகார சபை சட்டத்தின் பிரகாரம் குறித்த தோல்வியானது சபையின் ஆட்சி மாற்றமாக அமையாது விடினும் ஆட்சியாகர்களின் மீது மக்களுக்கு அவ நம்பிக்கையை உருவாக்கியுள்ளதை காட்டியுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
00

Related posts: