இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரிப்பு!
Wednesday, March 6th, 2024இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி கடந்த ஆண்டை விட கூட்டுத்தாபனத்தின் டொலர் வருமானம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய வருமான அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறிப்பாக கப்பல்களுக்கு எரிபொருளை வழங்கும் நடவடிக்கையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டதாகவும்,
இது கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் கடந்த காலங்களில் எரிபொருள் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பணியின் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதியை வரவேற்றார் டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழில் திறனை மேம்படுத்த ஆழ்கடல் சுழியோடி பயிற்சிநெறி!
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
|
|