இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி – 14 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கடற்படையினரால் கைது !

Sunday, February 9th, 2025

இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் வடக்கு கடற்பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் இன்று குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

000

Related posts:


கடமைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல ...
அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை புதிய வருட...
ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்ப...