இன்றும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடை – அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு!

Thursday, February 13th, 2025

இன்றும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

இதனிடையே, பௌர்ணமி தினமான நேற்றையதினம் சுழற்சி முறையிலான மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின்பிறப்பாக்கிகளும் செயலிழந்துள்ள நிலையில் அவற்றைச் சீர் செய்து தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது

000

Related posts:

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டம் தயாரிக்கப்படும் - த...
செத்தல் மிளகாய் உற்பத்தியை 25 சதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப...
தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்...