அறிவிப்புகள் செய்திகள் குறித்து அதிக அவதானம் செலுத்துங்கள் – நீரியல் வளங்கள் திணைக்களம்வலியுறுத்து!
Wednesday, November 26th, 2025
…..
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ஆபத்தான கடல் பிராந்தியங்களில் தற்போது தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கரைக்குத் திரும்புமாறும் அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகள் மற்றும் வானொலிச் செய்திகள் குறித்து அதிக அவதானம் செலுத்துமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
09
Related posts:
இஸ்லாம் மத பாடசாலை நூல்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!
வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெ...
பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !
|
|
|


