அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பம் – தேர்தல் ஆணைக்குழு !
Friday, February 28th, 2025
2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (28 ) ஆரம்பிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று (27) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாகச் சின்னங்கள் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப பத்திரம் இன்று முதல் மார்ச் மாதம் 28 ஆம் திகதி மாலை 3.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்பலாம் என்றும் அல்லது சம்பந்தப்பட்ட கட்சி செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
000
Related posts:
யாழ். கலைஞர்களின் தயாரிப்பில் “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” திரைப்படம்!
2021 அம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கான திகதிகள் பரீட்சை திணைக்களத்தால் அறி...
வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது - யாழ் மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு இடித்துரைத்...
|
|
|


