அமரர் முத்துராசா சந்திராதேவியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Thursday, June 18th, 2026
………….
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமாரின் சகோதரி முத்துராசா சந்திராதேவியின்
பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
அமரர் முத்துராசா சந்திராதேவி கடந்த 15.06.2026 அன்று தனது 70 ஆவது வயதில் வயது மூப்பின் காரணமக காலமானார்.
இன்நிலையில் அமரரது பூதவுடல் வட்டுக்கோட்டை – சுழிபுரம் பல்லசுட்டியிக் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் அஞ்சலி செலுத்தியதுடன் அமரரது உறவுகளுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பல்கலை மாணவர் மோதல்: முடிவுக்கு வந்தது வழக்கு!
அனுராவின் சொத்துக்கள் சந்திரிகா,சுனேத்ரா வசமாகிறது!
அதிபர்களுக்கு பதவி உயர்வு – கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


