யாழின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை 

Sunday, October 8th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(08) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை இந்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன் படி,  திருநெல்வேலி, தலங்காவில், பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, கந்தர்மடம், அன்னசத்திரத்துச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, பருத்தித் துறை வீதியில் நாக விகாரையிலிருந்து பாரதியார் சிலை வரை, விக்ரோறியா வீதி, மின்சார நிலைய வீதியில் ஒரு பகுதி, புகையிரத நிலையப் பிரதேசம், மார்ட்டின் வீதி, யாழ். 2 ஆம், 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்கள், ஸ்ரான்லி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து இராசாவின் தோட்ட வீதி வரை, அம்பலவாணர் வீதி, வேம்படிச் சந்தியிலிருந்து மார்ட்டின் வீதி வரையான ஆஸ்பத்திரி வீதி, ஆரிய குளத்திலிருந்து முட்டாசுக் கடைச் சந்தி வரையான ஸ்ரான்லி வீதி, கஸ்தூரியார் வீதியின் ஒரு பகுதி, மணிக்கூட்டு வீதியில் ஒருபகுதி, நாவாந்துறை, மீனாட்சி புரம் வீதி, முத்தமிழ் வீதி, வில்லூன்றி, பண்ணைப் பிரதேசம், மாதகல், யம்புகோளப் பட்டிணம், காட்டுப்புலம், குசுமாந்துறை, துரையப்பா விளையாட்டங்கு, யாழ்.கோட்டை, யாழ்.சிறைச்சாலைக் கட்டடத் தொகுதி, நொதேர்ண் சென்றல் கொஸ்பிற்றல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, பலாலி வீதி டம்றோ காட்சியறை, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஸ்ரான்லி வீதியிலுள்ள பீப்பிள் லீசிங் அன் பினான்ஸ் கம்பனி, கந்தர்மடம் AVNOR பிறைவேற் லிமிற்றெட், ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கிக் கிளை,சிறி நதியா நகை மாளிகை, Raja Talkies, LOLC, ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: