மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!.

Friday, December 2nd, 2022

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது.

அதன்படி, அன்றையதினம்முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை முதற்கட்டமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நடைபெறும்.

அதன்பின்னர், டிசம்பர் 23 ஆம் திகதிமுதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்காக, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு அம்மாதம் 20ஆம் திகதி நிறைவடையும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை உயர்தரப் பரீட்சை காரணமாக எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாகவும், 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணைக்கான இறுதிக் கட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: