மாணவர்களின் படுகொலை தொடர்பான அறிக்கை அடுத்தவாரம் கிடைக்கப்பெறும்!

Saturday, October 29th, 2016

யாழ் மாணவர்களின் படுகொலை தொடர்பில் விசேட புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை, கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்த போதே பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில் பொலிஸ் ஆணைக்குழுவும் தனித்து விசாரணையொன்றை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் பிரத்தியேகமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொலிஸ் ஆணைக்குழுவின் விடே விசாரணையாளர்கள் நடத்திய விசாரணையின் அறிக்கையும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு அறிக்கையும் அடுத்தவாரம் கிடைக்கும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரின் படுகொலை பாரதூரமான குற்றச்செயல் என்பதால், அது தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரம் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் முறையாக நடத்துகின்றனரா என்பதை மேற்பார்வை செய்வதற்கான அதிகாரம் ஆணைக்குழுவிற்கு இருப்பதாகவும், அதற்கமைய தமது ஆணைக்குழு செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

NPC_01

Related posts: