மக்களது அபிலாஷைகளை மையப்படுத்தியதே எமது அரசியல் இலக்கு – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Wednesday, February 15th, 2017

மக்களது அபிலாஷைகளை மையப்படுத்தியதான அரசியல் பாதையில் பயணிப்பதற்கு கடந்த காலங்களில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம். ஆனால் எதிரே வந்த அத்தனை தடைகளையும் தாண்டி தனக்கு மக்களால் வழங்கப்பட்ட குறைந்தளவான அரசியல் பலத்தைக்கொண்டு டக்ளஸ் தேவானந்தா என்னும் ஆழுமையுள்ள தலைவர் மக்களுக்காக பெரும் பணிகளை செய்து வெற்றிகண்டுள்ளார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் அமைந்துள்ள கட்சியின் பிரதேச அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற காரைநகர் பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆர்ப்பரிக்காது அமைதியாக இருந்து மத்திய அரசுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன்மூலமாக எமது மக்களுக்காக பெற்றுக்கொள்ள கூடிய அதிகமான தேவைப்பாடுகளையும் பெற்றுக்கொடுத்தமையால் தான் இன்று யுத்தத்திலிருந்து மீண்ட வடபகுதி ஒரு ஸ்திரமான நிலையில் இருப்பதற்கு காரணமாகியுள்ளது.

அதிகார மிடுக்க கொண்டதும் உரிமைக்காக போராடியவர்களதும் எமது ஏழை மக்களின் முதுகின்மீது ஏறி அரசியல் விபச்சாரம் செய்துவரும் தமிழ் தலைவர்கள் மத்தியில் ஆடம்பரங்களோ சுயநலமோ இல்லாது உழைக்கும் பாமர மக்களின் உரிமைக்காக எமது தலைவர்  டக்ளஸ் தேவானந்தா உழைத்தக்கொண்டிருக்கின்றார்

ஆனால் துரதிஸ்டவசமாக  தமிழ் மக்களது அரசியலில் சுயநலம் கலக்கப்பட்டுள்ளதால் அந்த சுயநல போர்வைக்கள் தமிழ் மக்களது அரசியல் அதிகாரங்கள் இழுக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்களது நலனை முன்னிறுத்தி உழைக்கும் எமது கட்சியின் கரங்களுக்கு அரசியல் அதிகாரங்கள் திட்டமிடப்பட்ட வகையில் தடுக்கப்பட்டு வந்தாலும் அவற்றில் எதிர் நீச்சல் போட்டு நாம் வெற்றிகண்டு வருகின்றோம்.

இந்நிலை மாற்றம் பெறவேண்டும் என்பதே எமது விருப்பாகம் இதனூடாகத்தான் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கென ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணன் (ரஜனி) தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன்  உடனிருந்தனர்.

1

Related posts: