பாடசாலை சீருடைத் துணிக்காக உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுகோரல்!
Wednesday, August 18th, 20212022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணிக் கொள்வனவுக்காக உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, உற்பத்தியாளர்கள் 5 பேர் விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
முன்பதாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, உடன்பாடு தெரிவிக்கப்பட்ட விலைக்கு பாடசாலை சீருடைத்துணிகளை, குறித்த விபரக் குறிப்புக்களுக்கமைய உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களை குறித்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், அவற்றைப் பிரித்து, பொதியிட்டு கோட்டக் கல்வி வலயங்களுக்கு விநியோகிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
.000
Related posts:
சல்வடோர் அணி வீரர்கள் இடைநிறுத்தம்
அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் வெற்றி!
2019 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!
|
|