ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாசா நல்லடக்கத்தில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Sunday, October 16th, 2016
காலஞ்சென்ற ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாசா நல்லடக்கத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா பங்கெடுத்துக்கொண்டதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.
கொழும்பு யாவத்தை பள்ளிவாசலில் இன்றையதினம் இறுதி வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து ஆராதனையிலும் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றிருந்தார். ஆராதனைகளைத் தொடர்ந்து அன்னாரின் ஜனாசா குறித்த பள்ளிவாசலுக்கு அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காலஞ்சென்ற ஆதில் பாக்கீர் மாக்கார் நேற்றுமுன்தினம் இலண்டனில்காலமானார். அன்னார் தேசிய ஊடக மத்தியநிலையத்தின் பணிப்பாளரும் முன்னாள் அமைச்சரமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.






Related posts:
அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை அந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோதமாகும் ...
தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிமன்றின் முடிவு வரும்வரை உள்ளூராட்சி சபை தேர்தல் ஆவணங்கள் எவையும் அச்ச...
வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் - வஜிர அபேவர்த...
|
|
|


