நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் – இன்று அதிகாலை ஜேர்மன் பயணமானார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Wednesday, September 27th, 2023

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜேர்மன் நோக்கி பயணமானார்.

ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்று அதிகாலை 5.05 அளவில் கட்டார் நோக்கி பயணித்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர்.659 ரக விமானத்தில் சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் ஜேர்மன் நோக்கி செல்லவுள்ளனர். ஐக்கிய நாடுகள் பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 24 ஆம் திகதி மீள நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: