துடுப்பாட்டம்: யாழ்.மாவட்ட ஏ அணி வெற்றி!
Monday, September 4th, 2017
இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 15 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாண மாவட்ட ‘ஏ’ அணி வெற்றிபெற்றது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் இணைந்த அணியை எதிர்த்து யாழ்ப்பாண மாவட்ட ‘பி’ அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் இணைந்த அணி 24.3 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றது.
அதிகபட்சமாக பிரவிந்தன் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் யாழ்ப்பாண மாவட்ட ‘ஏ ’அணியின் சார்பில் ஜோனந்தன், சதுர்சன் தலா 4 இலங்குகளைக் கைப்பற்றினார்.
75 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண மாவட்ட ‘ஏ’ அணி 19.2 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 3 இலக்குகளை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றது. நிகேஸ் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.
Related posts:
|
|