ரஷ்ய அரசாங்கம் உணவுப்பொருட்கள் உதவு!
Thursday, August 10th, 2017சமீபத்தில் ஏற்றபட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஒரு தொகை உணவுப்பொருட்களை நன்கொடையாக வழங்கப்படுவதாக ரஷ்யாவின் சிவில் பாதுகாப்பு மற்றும் அனர்த்தம் தொடர்பான அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக 32 தொன் எடை கொண்ட நிவாரணப்பொருட்களுடன் சரக்கு விமானம் ஒன்று தற்பொழுது மொஸ்கோ நகரிலிருந்து இலங்கையை நோக்கி புறப்பட்டுள்ளது.வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர்உணவுப்பொருட்களை வழங்குவது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.இத்தகவலை இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மியனவள தெரிவித்துள்ளார்.
Related posts:
1 ஆம், 2ஆம் தரங்களுக்கு ஆங்கில பாட நூல்களை வழங்க தீர்மானம்!
சமஷ்டி வேண்டாம் என சுமந்திரன் சொல்லியிருப்பாரா? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி...
வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி - வடக்கு மாகாண சுகாதாரத் த...
|
|