கட்சிகளுக்கிடயே காணப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்காக உழைக்க நாம் தயாராக இருக்கின்றோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Thursday, April 19th, 2018

கடந்த காலங்களில் கட்சிகளுக்கிடையே காணப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்காக உழைக்க நாம் தயாராக இருக்கின்றோம்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட  உதவிநிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் கட்சி பேதங்களால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பான முறையில் முன்னெடுக்க முடியாத நிலை இருந்துவந்தது. இந்த நிலையில் நடந்த முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை வடக்கில் ஒரு சில சபைகளை தவிர ஏனைய சபைகளில் ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் தான் மக்கள் நலன்சார்ந்து உழைக்க எந்தக் கட்சி முன்வருகின்றதோ அந்தக் கட்சிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருந்தோம்.

இதனடிப்படையில்தான் யாழ் மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளுக்கு ஆட்சியமைக்க உரிமை கோரி எம்மோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசிக்கொண்டதற்கு இணங்க எமது ஆதரவை வழங்கியிருந்தோம்.

அந்தவகையில் கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து நாம் மக்களுக்கு உழைக்க தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: