அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – மக்கள் நலன் சார் பல்வேறு அதிரடித் தீர்மானங்கள் நடைமுறைக்கு!

Wednesday, May 31st, 2023

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது

கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான, டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், அங்கஜன் இராமநாதன் உள்ளிடடோருடன் பாதுகாப்பு தரப்பினர் பொலிசார் மற்றும் துறைசார் அரச அதிகாரிகள் திணைக்களங்களின் தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும்  பங்கேற்றிறுந்தனர்

குறித்த கூட்டத்தின்போது

சனி ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு  அருகாமையில் பொலிசாரின்  பிரசனத்தை அதிகரிப்பதற்கு யாழ்  மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும்  பாதுகாப்பு கடமையில்  ஈடுபடுத்துமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இன்றையதினம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதோடு குறித்த விடையத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக  யாழ்  மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரால்   உறுதியளிக்கப்பட்டது

கடந்த வாரம்முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு நடவடிக்கையும்  முன்னெடுக்கப் படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

அதேபோன்று

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு கட்டணமீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு முச்சக்கர வண்டி தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

குறிப்பாக கட்டண மீட்டர் பொருத்துவதற்கான கட்டணத்தினை கட்டண மீற்றர் பொருத்தும் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதனைப் பொருத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறும், கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

இந்நிலையில்

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில்  ஆராய வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற நிலையில் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவிகே சிவஞானம் யாழ் மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் வடக்கு மாகாண சபையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானம் ஒன்று கிடப்பில் கிடப்பதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் வடக்கு மாகாண சபையின் அவை தலைவர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கான இணைப்பாளர் பிரதமர் செயலாளர், நீர்பாசன பொறியியலாளர்  களப்பணிப்பாளர் உட்பட ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழ  நீர் விநியோகத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதோடு நாளைமறுதினம் முதலாவது கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: