வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாளர்கள் குறைப்பு!

Thursday, May 31st, 2018

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன தெரிவித்துள்ளார்.

குடிவரவு, குடியகல்வுத்திணைக்கள  அதிகாரிகளைச்சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான தூதரகங்களின் பணியாளர்கள் எண்ணிக்கையைப்பாதியாகக்குறைக்கப்பட வேண்டும் என்றும் அரச தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் பல நாடுகளில் உள்ள தூதரகங்கள் ஆக்கபூர்வமான முறையில் செயற்படவில்லை என்றும் அவர் அதிரப்தி வெளியிட்டார்.

Related posts: