ரயில்வேதுறைக்கு இந்தோனேசியா ஒத்துழைப்பு!
Saturday, January 27th, 2018இலங்கையின் ரயில்வேதுறை அபிவிருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க இந்தோனேஷியா முன்வந்துள்ளது.
இதற்கான தளஆய்வு அறிக்கையை தயாரிப்பதற்கு இந்தோனேசிய தொழிநுட்ப குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தோனேஷியா ஜனாதிபதி ஜோகோ விடோடோஉறுதி அளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தோனேஷியா ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போதே இந்தோனேஷியாஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
7ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இந்தோனேஷியாவில் இருந்த ஸ்ரீவிஜய அரச பரம்பரையினர் இலங்கையிலுள்ள அபயகிரி விகாரையுடன் நெருக்கமான தொடர்பை கொண்டுஇருந்தனர் என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Related posts:
கோத்தபாய ராஜபக்சவிற்கே ஆதரவு: அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!
இரத்தினக்கல் ஏற்றுமதியில் இலங்கை முன்னணி!
புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று நாம் கூறவில்லை - இராணுவத் தளபதி !
|
|