மூன்று நாட்களுக்கு மேலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு காட்டுங்கள் – GMOA இற்கு சுகாதார அமைச்சர் சவால்!
Friday, October 27th, 2017அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முடிந்தால் மூன்று நாட்களுக்கு மேலான வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்து காட்டுமாறு சுகாதார அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தினை முன்னிட்டு பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாதவர்களில் பிரதானமானவர்களே வைத்தியர்கள். அவர்கள் ஏழு தினங்களும் பணிபுரிய வேண்டியவர்கள். அவ்வாறான நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்களாயின் அவர்களை மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.
Related posts:
பயணிகள் விமானம் கோர விபத்து - 157 பேர் பலி!
தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் அகற்றம் - யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவ...
கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகள் - ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப...
|
|