நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் வரையறைகளின் அடிப்படையிலேயே செயற்பாபடுகள் அனைத்தும் நடைபெறும் – பிரதி பொலிஸ் மா அதிபர்!

Monday, May 11th, 2020

கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீண்டபின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள மக்களுக்கு பல்வேறு வகையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பிரதி பொலிஸ் மா அதிபரினால் 7 முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில் இன்றுமுதல், பணிக்கு செல்பவர்கள், மின்னணு வடிவத்தில் ஒரு ஆவணம் அல்லது பணியிடத்தில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் உத்தியோகபூர்வ அடையாள அட்டை ஆகியவற்றை பயணத்தின் போது வைத்திருப்பது கட்டாயமாகும்.

தங்கள் சொந்த வாகனங்களில் வேலைக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணிக்கு முன்னர் பணியிடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி பணியில் இருந்து வீடு திரும்பும் அரசு ஊழியர்கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை பயணிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தனியார்துறை ஊழியர்களுக்கு மாலை 4 மணிமுதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் வீடு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையோர் முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களில் வேலைக்கு பயணிக்க பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அவை தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டுமான தளங்கள், அழகு நிலையங்கள் மற்றும் பிற வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இன்றுமுதல் பணியைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் உணவகங்களும் அவற்றின் செயல்பாடுகளைச் செய்யவும் அனுமதி வழங்கப்படாது. பாரிய மக்கள் கூட்டம் கூடுவதனை தவிர்ப்பதற்காக அதிகாரிகள் இந்த ஒழுங்குமுறையில் தீவிரமாக உள்ளனர். சமைத்த உணவு, தேநீர், பழச்சாறு போன்றவற்றை விற்கும் உணவகங்கள், கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள் அல்லது இரவு நேர கேளிக்கை விதிகள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்க அடிப்படையிலான கட்டமைப்பு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும். 1 அல்லது 2 இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: