முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விஷேட பயிற்சி!

Wednesday, March 14th, 2018

சுற்றுலாப் போக்குவரத்து பற்றிய பயிற்சியைப் பத்தாயிரம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பெற்றுக் கொடுக்க வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நிதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அனைத்து முச்சக்கரவண்டி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயிற்சிக்கு சாரதிகள் தெரிவு செய்யப்படுவர்.

இந்தப் பயிற்சிகள் மூன்று கட்டங்களாக வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

Related posts:


எதிர்பார்த்தளவு கொரோனா தொற்று வடக்கில் ஏற்படவில்லை - சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவி...
எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை - அமைச்சருமான ஹெகல...
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் - எரிசக்தி அமைச்சர் உதய கம்ம...