மருந்து விலை குறைப்பால் பிரதிபலனாக 09 பில்லியன்!

Thursday, January 11th, 2018

மருந்து விலை குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னகூறியுள்ளார்.

இலங்கையில் மருந்து விலை குறைக்கப்பட்டுள்ளது போன்று சர்வதேச நிறுவனங்களும் மருந்து உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர்கூறியுள்ளார்.

இதன் காரணமாக நாட்டுக்கு ஆண்டொன்றுக்கு 09 பில்லியன் ரூபா பிரதிபலன் கிடைப்பதாகவும் சர்வதேச மருந்து உற்பத்தி விலைகள் குறைக்கப்பட்டதன் பிரதிபலன் இலங்கைக்குமாத்திரம் கிடைப்பது விஷேட அம்சமாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts: